Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், எஸ் சதீஸ்
மின் கட்டணத்தை அவ்வப்போது அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலவாக்கலை மற்றும் கினிகத்தேன நகரங்களில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தலவாக்கலை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால ஏற்பாடு செய்திருந்ததுடன், கினிகத்தேன நகரில் நடைபெற்ற போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பதாதைகளை ஏந்தியவாறும் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2025