Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை- இந்திய ஊடக நட்புறவு சங்கத்தால் (SLIMFA) முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஊடக பேரமர்வினை இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே வெகுஜன ஊடகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ராஹோட்டலில் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
புதியஊடக தோற்றப்பாடுகளை ஒன்றிணைந்து கண்டறிதல் என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த ஊடகப் பேர் அமர்வானது 2025 ஏப்ரல் 25 - 26 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இதில், சமகால ஊடக செல் நெறிகள் மற்றும் ஏனைய புதிய அம்சங்கள் தொடர்பாக இந்த அமர்வுகளில் ஆராயப் பட்டன.
அத்துடன் ஊடக துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கையடக்க தொலைபேசிகள் மூலமான ஊடக செயல்பாடுகள், ஊடகத்துறை அடிப்படையிலான வருமான வழிகள்,தரவுகள் சார்ந்த ஊடகவியல், தவறான தரவுகள் மற்றும் உண்மைகளை சரிபார்த்தல், கருப்பொருள் உருவாக்கம் மற்றும் ஒலிசார் ஊடகம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இந்த அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்படும்.
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஊடகத்துறை சார்ந்த குறித்து நிகழ்வானது சிறப்புரைகள், குழுநிலை விவாதங்கள், பக்க அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும்.
அத்துடன் தொழில் ரீதியான அபிவிருத்தி மற்றும் இந்தியா இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இடையிலான ஒத்துழைப்பினை வலுவாக்கல் ஆகியவற்றுக்கு இந்த அமர்வு தனித்துவமான களத்தினை வழங்குகின்றது.
இந்தியாவிலிருந்து பங்கேற்கும் நிபுணர்களில் First Post நிறுவனத்தின் முகாமைத்துவ ஆசிரியர் Ms பால்கி சர்மா,WION நிறுவனத்தின் வெளிநாட்டுச் செய்திகள் பிரிவின் உதவி ஆசிரியர் திரு சித்தாந்த் சிபல் இந்தியா டுடே நிறுவனத்தின் பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரி சைலேஷ் சேகர் மற்றும் TAM ஊடக ஆய்வு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எல் வி கிருஷ்ணன் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
அதேவேளை, இலங்கையைச் சேர்ந்த துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு இந் நிகழ்வில் பங்கேற்பதற்காக பதிவுகளை மேற்கொண்டிருக்கும் ஊடகத்துறை சார்ந்த மற்றும் வர்த்தக துறையைச் சார்ந்த சமூகத்தினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர்லயத்தின் வழிகாட்டலுடன் 2024 மே யில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை -இந்திய ஊடக நட்புறவு சங்கம் இரு நாடுகளுக்கும்இடையிலான ஊடகத்துறை சார்ந்த உறவுகளை வலுவாக்குவதனை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றது.
அதன் உருவாக்கம் முதல் பல்வேறு நிகழ்வுகள்குறிப்பாக குழுநிலை விவாதங்கள் வட்டமேசை கலந்துரையாடல்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஊடகத்துறை சார்ந்த விடயங்களை கவனத்தில் கொண்டுஒழுங்கமைக்கப்பட்ட இருந்தன. அது மட்டுமல்லாமல் நாகரீக ரீதியாக இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் இவ்விரு நாடுகளின் தொடர்புகளை மேம்படுத்துவதிலும் இந்த முன்னெடுப்பு கணிசமானவகிபாகத்தினை கொண்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025