2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மேலும் சில பிரதேசங்கள் விடுவிப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பிரதேசங்கள் இன்று காலையில் 5.00 மணி தொடக்கம் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனை, கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் – அன்றூஸ் வீதி, கீழ் மற்றும் மேல்புனித அன்றூஸ் பிளேஸ் பகுதிகள் ஆகியவற்றில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும், பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவுக்குட்டப்ட  90 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .