2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

நாமலின் சட்ட பரீட்சை: சி.ஐ.டி விசாரணை

Editorial   / 2025 பெப்ரவரி 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாஸ்டன்லங்கா சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு ஆஜராகி சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றதாகக் கூறி, ''லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்'' என்ற அமைப்பு குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) புககர் அளித்துள்ளது. மேற்கண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி )அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .