J.A. George / 2021 பெப்ரவரி 20 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 3 மரணங்கள் நேற்று பதிவாகின.
அதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.
மாத்தளை பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவருக்கு மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கலகெடிஹேன பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவருக்கு வத்துப்பிட்டி வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர், அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
நுகேகொடை பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதன் பின்னர் அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025