2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தடுப்பூசி போட மறுக்கும் ஹரின்

S. Shivany   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று(16) முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் அதனை செலுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

அதாவது, குறைந்தப்பட்சம் ஒரு மில்லியன் பொதுமக்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொவிட் அவதான நிலையில் உள்ள தரப்பினர் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முதலில் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .