2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Editorial   / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய , உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை, உயர்நீதிமன்றில் புதன்கிழமை (14)  தாக்கல் செய்துள்ளார்.

 அரசியலமைப்பை  ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ள மனுதாரர் ஆகையால், இடைகால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .