2025 மார்ச் 31, திங்கட்கிழமை

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Editorial   / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: - 25 ஆண்டுகள்
அடையாள அட்டை -  995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின்  பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 - 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 - 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X