Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தள பிரதேசத்தில் சில கிராமங்களில் இன்று (22) பிற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனை தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வினாடிக்கு மட்டுமே நிலம் நடுங்கியதாக தெரிவித்த மக்கள்,அப்போது மயில்கள் உள்ளிட்ட பறவைகள் கடுமையான சத்தங்களை எழுப்பிக்கொண்டு பறந்தன என்றனர்.
ஹதபானகல, புத்தள மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது மாணவர்கள் மைதானத்துக்கு அனுப்பப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாடிக்கட்டிடங்களில் இருந்தவர்கள் நில நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
குறித்த நில நடுக்கம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago