2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

பகிடிவதையை எதிர்த்த தேரர் மீது தாக்குதல்; 17 பிக்கு மாணவர்கள் கைது

Menaka Mookandi   / 2013 ஜூன் 11 , மு.ப. 11:51 - 0     - 862

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாத்தறை சுதர்ஷி பிரிவெனா உயர்க்கல்லூரி தேரர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அதே கல்லூரியைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் 17பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த தேரரை, அவர்கள் காலால் உதைத்து குடையினால் தாக்கினார்கள் என்று மாத்தறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான அக்குரஸ்ஸ தம்மபால தேரர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X