2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

ரயில் மோதியதில் யானை இறப்பு

Princiya Dixci   / 2022 ஜூலை 20 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் பயணித்த  கடுகதி ரயிலில் மோதி காட்டு யானையொன்று  இன்று (20) காலை இறந்துள்ளதாக அக்கோபுர பொலிஸால் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற ரயிலில் அக்போபுர பகுதியில் வைத்து காட்டு யானை மோதுண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ள யானைக்கு பன்னிரண்டு வயதிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X