2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

மூன்று மாதங்களின்பின் எரிவாயு விநியோகம்

Princiya Dixci   / 2022 ஜூலை 21 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் திருகோணமலை - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு இன்று (21)  விநியோகிக்கப்பட்டது.

தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 12 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு  750 சிலிண்டர்கள் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் வைத்து இவ்வாறு  விநியோகம் செய்யப்பட்டது.

தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவின் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில், கடந்த மே மாதத்துக்கான மின்சார கட்டணப் பட்டியலின் பிரகாரம் சமையல் எரிவாயு விநியோகிப்பட்டது.

இதன்போது  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையில் வரிசை சரியாக இல்லையெனத் தெரிவித்து,சிறிய வாய்த்தர்க்கமும் இடம்பெற்றதை காணமுடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X