2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மூதூரின் பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை மாவட்டத்தில் நீடித்துவரும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக, மூதூரில் பல பிரதேசங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக மூதூரின் குறித்த பிரதேசங்களான பாட்டாளிபுரம்,  நல்லூர்,  சீதன வெளி  உட்பட பல பிரதேசங்களுக்கு மூதூர் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

வரட்சி தொடருமானால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் இன்னும் பல்வேறு பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .