2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

பஸ் விபத்து; ஒருவர் காயம்

Princiya Dixci   / 2022 ஜூலை 17 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு பகுதியில் வைத்து , பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சேவை பஸ் ஒன்று, காலை பாதையை விட்டு விலகி இன்று (17) விபத்துக்கு உள்ளாகியது.

இதில் பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நீலாப்பொல பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற மூதூர் போக்குவரத்துச் சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X