Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக ஞாபகத்திறன் மூலம் திருகோணமலை சேர்ந்த 3 வருடங்களும் 11 மாதங்களுமான தாரா என்ற சிறுமி சோழன் உலக சாதனை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வைத்து சனிக்கிழமை (12) படைத்துள்ளார்.
தவழும் பருவத்தில் இருந்தே அதிக ஞாபகத் திறனுடன் இருப்பதைக் கண்டறிந்த அவருடைய பெற்றோர் பிரேம்ராஜ் மற்றும் வைதேகி தம்பதியரின் மகளுக்கு தொடர் பயிற்சியளித்ததன் விளைவாக சோழன் உலக சாதனையை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் வைத்து 2 முதல் 7 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், தனிம வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல் உறுப்புகள் 6இன் உட்பாகங்கள் போன்றவற்றை கூறிய அதேவேளை 100 சமூக ஊடகங்களின் சின்னங்களையும் பிழையின்றி அடையாளம் காட்டினார்.
இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்து பரிசோதித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் எம்.தனராஜ், மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் சுயன்தன் விக்னேஷ்வர ராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளர் சிவ வரதகரன் போன்றோர் சிறுமியின் முயற்சியை உலக சாதனையாக பதிவு செய்தனர்.
சோழன் உலக சாதனை படைத்த சிறுமி பிரேம் ராஜ் தாராவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்த இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் வி. ராஜசேகரன், நகராட்சி மன்றச் செயலாளர் ஜெய விஷ்ணு, பொலிஸ் அதிகாரி ஜெய்ஸ், உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் தலைமை ஆசிரியர் மதன் துஷாந்தி, மாவட்ட இளைஞர் சேவைகள் அமைப்பின் தலைமை அலுவலர் யுவராஜ் குமார், பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் சார்பாக திருமதி.கோணேஸ்வரநாதன் தவமலர் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் உலக சாதனை படைத்த சிறுமி தாராவை இந்தியாவில் இருந்து காணொளிக் காட்சியூடாக வாழ்த்திப் பாராட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago