Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுப் பொருட்களை வாங்கிய இருவரை, இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான், நேற்று முன்தினம் (28) உத்தரவிட்டார்.
திருகோணமலை - மனையாவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மனையாவெளி பகுதியிலுள்ள கோவில் ஒன்றின் தர்மகர்த்தா மற்றும் கோவில் சாரதி ஒருவருமே 58,500 ரூபாய்க்கு திருட்டுப் பொருட்களை வாங்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் தாம்பலம் - 6, குடம் - 4, விளக்குகள் பெரிது - 2, சின்னவிளக்கு - 2, ஒலிபெருக்கி சாதனங்கள், ஒட்ட தீபம் - 2, ஆழவட்டம் - 2, விசிறி - 1, கொடி – 2 மற்றும் சாமரை - 1 போன்ற திருட்டுப் பொருட்களை வாங்கி வைத்திருந்த நிலையில் சந்தேகநபர்களை கைதுசெய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago