Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர்கள் நால்வரை, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான், இன்று (27) உத்தரவிட்டார்.
ஐந்தாம் வட்டாரம், திரியாய் மற்றும் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 18, 20, 21 மற்றும் 23 வயது இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பகையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இரு குழுவில் இருந்தும் சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago