2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண வழிநடத்தல் குழு உருவாக்கம்; பிரச்சினைகள் இருப்பின் அறிவிக்கவும்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு, மக்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், மாகாண வழிநடத்தல் குழு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின்  அறிவுறுத்தலுக்கமைய ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச்செயலாளர் ருசிர டிலான் மதுசங்க தெரிவித்தார்.

அதற்கிணங்க பிரதான முகாமைத்துவ வழிநடத்தல் அலுவலகத்துக்குத் தொடர்புகொள்ள வேண்டுமெனில், 0262222102 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது epgovernormedia@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கூடாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதான  வழிநடத்தல் இணைப்பதிகாரியாக -உதிதா ரஸ்னாக்க என்வர் செயற்படுவதாகவும் அவரை  0716842334 என்ற அலைபேசி இலக்கம் அல்லது  deemathi@yahoo.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கூடாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை மாவட்ட ரீதியாக தொடர்புகொள்வதற்கு,   அம்பாறை- சாமர திலங்க-0713889000-chamaratfc83@gmail.com,  திருகோணமலை- 0764110153- Jena.jeynaa@gmail.com,  மட்டக்களப்பு- 0773222023, ஹரி பிரதாப்-harrytrds@gmail.com, ஆகியோரை தொடர்புகொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊடக இணைப்பதிகாரியாக ருசிர டிலான் மதுசங்க என்பவரை,  0777773522 என்ற அலைபேசி இலக்கம் அல்லது ruchiradmadushanka@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கூடாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உடனடி அழைப்புக்கு என்ற 0716842334  அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .