2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிண்ணியாவில் திருட்டுகள் அதிகரிப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2020 மார்ச் 02 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இது குறித்து அனைவரும் விழிப்பாக இருந்து, தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், கிண்ணியா ஷூரா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரோடு கிண்ணியா ஷூரா சபை தொடர்புகளை மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இரவு நேரக் காவல் கடமைகளை அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, பள்ளிவாசல் நிர்வாகங்களும் பிரதேச இளைஞர்களும் இது தொடர்பாக அக்கறையோடு செயல்படுமாறும்  ஷூரா சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .