2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காங்கிரஸில் இணைவு

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் ஐ. சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ். தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று (08) உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

முன்னதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பயணித்த இவர்கள் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார்கள்.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .