2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேகநபரை, நேற்று (05) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், மிருகங்களை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டின் பின்புறத்தில் கட்டுத்துவக்கை மறைத்து வைத்திருந்த நிலையில், கோமரங்கடவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுத்துவக்குடன் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .