Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய நால்வரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் பி.சிவக்குமார், நேற்று (19) உத்தரவிட்டார்.
வரோதய நகர், அன்புவழிபுரம், நிலாவெளி பகுதிகளைச் சேர்ந்த 37, 29, 39, 48 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் இணைந்து, வீதியால் சென்ற இளைஞளை மதுபோதையில் தாக்கிக் காயப்படுத்தியுள்ளதாக, உப்புவெளி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
1 hours ago