2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரசாங்க வெளியீட்டு பணியகம் திறந்து வைப்பு

Editorial   / 2022 ஜனவரி 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்க வெளியீட்டு பணியகம், வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று (06)  திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வும் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, தகவல் திணைக்கள பணிப்பாளர், முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி, உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .