2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அக்போபுர விபத்தில் இருவர் படுகாயம்; வான் சாரதி கைது

Editorial   / 2022 ஜனவரி 11 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, அக்போபுர  மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை, கொழும்பிலிருந்து திருகோணமலை க்குச் சென்ற வான் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய வான் சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .