2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ தலதா விவகாரம்: துரித நடவடிக்கைக்கு ஜனாதிபதி வலியுறுத்தல்

Editorial   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ  தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்டி நகருக்கு விஜயம்

சிறி தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (24) இரவு கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன் போது அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்திய ஜனாதிபதி, ஸ்ரீதலதா வழிபாட்டிற்காக வருகை தரும் பக்தர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான வசதிகளை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன்,கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .