2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிவேரிய - அரலியகஸ்தேக சந்தியில் வியாழக்கிழமை (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல்களின்படி, காரில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

இதன்போது அவரது இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டது, ஆனால் அவர் நிற்காமல் மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .