Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவுல மின்சார சபைக்கு முன்பாக, நேற்று (17) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னால் வந்த கெப் வண்டி மோட்டார் சைக்கிளை மோதியது.
இதில் காயமடைந்த மாணவன், நாலந்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
நாவுல-பெனலபொட பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட பிரேமோத் சத்சர என்ற பாடசாலை மாணவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கெப் வண்டியின் சாரதி ஹசலக்க, பொம்பல்வ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபர் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago