2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 25) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.  

மந்திகை, மடத்தடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியது. இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X