2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

லோ லெவல் வீதியின் போக்குவரத்து தடை

Janu   / 2024 ஜூலை 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியின் ரணால, சுடவில பிரதேசத்தில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால் வேவிலைச் சந்தி மற்றும் சியாம்பலா கஸ் சந்தியிலிருந்து கனரக வாகனங்கள் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

மேலும் , அப்பகுதி மக்களும், பொலிஸாரும் இணைந்து கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X