2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2024 ஜூலை 26 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தெமோதர கவரவெல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றது.

தெமோதர, கவரவெல பிரிவு என்ற முகவரியில் வசித்து வந்த 26 வயதுடைய ஜெபமாலா மரியஞ்சோதி பெர்ணான்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சடலம் அதே ரயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஹாலிஎல்ல நிலையத்தில் எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X