2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

ரம்புக்வெல்லவின் கோரிக்கை நிராகரிப்பு

Simrith   / 2025 மார்ச் 20 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பாராளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவர் சார்பாக செய்யப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்தது. 

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக அந்தக் கணக்கு முடக்கப்பட்டது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் சுகாதார அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 16 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் மூன்று காப்பீட்டுக் கொள்கைகளை முடக்குவதற்கான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் சமீபத்தில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது.

ரம்புக்வெல்லவின் ஓய்வூதியம், அரகலயவின் போது அவரது வீட்டிற்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.95.9 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீடு ஆகியவை வைப்பு செய்யப்பட்டுள்ள பாராளுமன்றக் கிளை வங்கிக் கணக்கையும் இந்த விதியின் கீழ் முடக்கியுள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வங்கிக் கணக்கின் மீதான முடக்கத்தை நீக்குமாறு சட்டத்தரணி கோரினார். 

இருப்பினும், உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X