2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

மோட்டார் போக்குவரத்து காரியாலயத்துக்கும் பூட்டு

Editorial   / 2024 நவம்பர் 08 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் இம்மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் வழமையான கடமைகளுக்காக மூடப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

அந்த அலுவலகம் வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படுத்தப்படுவதால், இவ்விரு நாட்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் கொழும்பு கிழக்கு ​தேர்தல் தொகுதியில், 6 மற்றும் 7  வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்க தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X