2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டி சாரதி கொலை: இருவர் கைது

Freelancer   / 2024 ஜூலை 27 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருந்துவத்தை - வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

இந்த கொலையினை மேற்கொண்ட பின்னர் முச்சக்கரவண்டியுடன் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் மூவரில் இருவர் திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் பிரதான சந்தேகநபரும் அடங்குவதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய கத்தி மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் கைப்பேசி ஒன்றை திருடுவதற்காக இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X