Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்து கடையொன்றினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய, உருகல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய டபிள்யூ.லீலாரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொலஸ்ட்ராலுக்கு வைத்தியர் பரிந்துரைத்ததன் பிரகாரம் குறித்த மருந்தகத்தினால் அவருக்கு மருந்து வழங்கப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த மருந்தை உட்கொண்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இது தவறான மருந்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
9 hours ago