2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை

மருமகன் தாக்கியதில் மாமனார் மரணம்

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமனரை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே நேற்று  பகல் வாக்குவாதம் ஏற்பட்டது. மகளை மருமகன் தாக்கியமையைக் கண்ட அவர் ஏன் தாக்குகிறாய் என கேட்டுள்ளார். அதனால் கோபமுற்ற மருமகன் அவர் தலை மீது பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் .

இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X