2025 ஏப்ரல் 16, புதன்கிழமை

மீனவ சமூக மேலாண்மை நிகழ்ச்சி திட்டம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் சமூகத்தின் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் மூலம், கடலில் முக்கியமான சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு பயிற்சித் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி அன்று வாழைச்சேனை மீன்வளத் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவ ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் கடலில் ஏற்படும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் மீனவ மற்றும் நீரியல் அலுவலகத்துடன் இணைந்து அவசர மருத்துவ நிலைமைகளின் போது உயிர்காக்கும் நுட்பங்கள் மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகள் குறித்து வாழைச்சேனை பகுதியில் உள்ள மீனவ சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அங்கு, மன நலம், அடிமைத்தனம் மேலாண்மை மற்றும் அவசர காலங்களில் அடிப்படை முதலுதவி குறித்து மீனவ சமூகத்திற்கு தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சி அளித்த பின்னர், கடற்படை மீனவ சமூகத்திற்கு தொற்றா நோய்கள் குறித்த மருத்துவ மனையையும் நடத்துவதற்காகவும் கடற்படை ஏற்பாடு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X