2025 ஏப்ரல் 16, புதன்கிழமை

மூன்று நாட்களில் ரூ. 134 மில்லியன் வருவாய்

Simrith   / 2025 ஏப்ரல் 14 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு பருவ காலத்துடன் இணைந்து, கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு ரூ. 134 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது என்று அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் மொத்தம் 387,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தொகையில், முதல் இரண்டு நாட்களில் (ஏப்ரல் 11 மற்றும் 12) 297,736 வாகனங்களிலிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X