2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை

முன்பள்ளி சிறார்களுக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு

J.A. George   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், உணவு கொடுப்பனவு பெறும் முன்பள்ளி சிறார்களின் எண்ணிக்கையை 155,000ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .