Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Mayu / 2024 நவம்பர் 24 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோய்களைக் குணப்படுத்த மத வழிபாடு நடத்துகிறோம் என்ற போர்வையில் மதம் மாறிய குழுவினர் மீது மல தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மொனராகலை வராகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வராகம பத்தஹகல, சியாம்பலாண்டுவ, பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட பெண்களை தெய்வ வழிபாடு நடத்தி குணமாக்குவதாகவும், அவர்கள் மேலும் குணமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வரகம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், குறித்த பெண் வாரகமவில் உள்ள தனது வீட்டில் சமய வழிபாடு நடத்தி நோய்களை குணப்படுத்தி வருகின்றார்.
இவ்வாறு சேவையை மேற்கொண்ட நோயாளிகள் குழுவொன்று மேலதிக சிகிச்சைக்காக ஜாஎல வெலிகம்பிட்டிய பிரார்த்தனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் போதே பஸ் மீது இந்த மலக்கழிவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் பஸ்ஸில் பயணித்த மக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் தலையிட்டு அவர்களை மீண்டும் ஜாஎல பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
சியாம்பலாண்டுவ சாசனார்ஷக சபையின் தலைவர் புத்தம ரஜமஹா விஹாரதி பனமாயே ரதனசர பதிவாளர் மரியராவே தம்மரக்கித மற்றும் பலர் கலந்து அதனமக் பிரதேசவாசிகள் சுமார் 200 பேர் வரை வாரகம பாடசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதி மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி போராட்டம் நடத்தினர்.
பின்னர், சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்தின் பௌத்த விவகார இணைப்பாளர் டி.எம்.சரத் அவர்கள் வந்து, நவம்பர் (25) பிற்பகல் இரண்டு மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும் எனக் கூறியதையடுத்து, குழுவினர் சமாதானமாக கலைந்து சென்றனர்.
அகுந்துபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனபால வனசிங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
சுமணசிறி குணதிலக்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago