2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மகனை சித்திரவதை செய்த தந்தை கைது

Janu   / 2024 ஜூலை 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல், தற்கொலை செய்து கொள்வோம் என கூறி சித்திரவதை செய் தந்தையொருவர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் , அவர் தனது தாயாருக்கு பணம் அனுப்புவதாலும், கணவனும் பணம் அனுப்பாததாலும் சிறுவனை சித்திரவதை செய்து அதன் காணொளியை மனைவிக்கு அனுப்பியுள்ளார் .

இந்த காணொளியை குறித்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனது மூன்று வயது சிறுவனை காப்பாற்றுமாறு பதிவிட்டுள்ளார் .

அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X