2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

”மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது”

Editorial   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாணந்துறையில் நடந்த, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் எல்லா நேரங்களிலும் தேர்தல்களை நடத்திக் கொண்டே இருக்க முடியாது, அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றார்.

"உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல் மட்டுமே நடத்தப்பட உள்ளன. சில சட்டங்களை மாற்ற வேண்டியிருப்பதாலும், நாட்டின் அபிவிருத்திக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தல்இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாது," என்று அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .