2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பொரளை கொலை வழக்கு;சரத்துக்கு மரண தண்டனை

Simrith   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, கே.எம். சரத் பண்டாரவுக்கு மரண தண்டனை விதித்தார். 

மேலும், தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜெயநாத் உட்பட மூன்று பிரதிவாதிகளை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

2014 ஆகஸ்ட் 01 ஆம் திகதி பொரளை, வனாத்தமுல்ல பகுதியில் உள்ள ஒரு சலூனுக்குள் ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு குற்றவாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .