Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில அழகான பெண் ஊழியர்களை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தின் மற்றுமோர் ஊழியர் இன்று (25) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி திருமதி குஷானி ரோஹனதீரவினால் குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்த திணைக்கள அதிகாரி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்த ஊழியர், உதவியதாக விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற பராமரிப்பு துறையின் உதவி வீட்டுக்காப்பாளர் முன்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையில் 3 பெண் அதிகாரிகள் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை இன்னும் சில நாட்களில் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
8 hours ago