2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பூஸ்ஸ முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொலை

Editorial   / 2025 மார்ச் 13 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க அக்மீமன பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வியாழக்கிழமை (13) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  

முன்னாள் கண்காணிப்பாளர் தனது வீட்டின் முன் உள்ள முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கண்காணிப்பாளரின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .