2024 ஒக்டோபர் 05, சனிக்கிழமை

பியூமி ஹன்சமாலியிடம் 9 மணி நேரம் விசாரணை

Freelancer   / 2024 ஒக்டோபர் 05 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகையும் மாடலுமான பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.

அவருக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக நேற்று (04) சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சொகுசு கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் என்பது குறித்தும், அவர் விற்பனை செய்யும் அழகுசாதன பொருட்கள் ஊடாக அதிக அளவு பணம் பெற்றது எப்படி என்பது குறித்தும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

அந்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .