2025 மார்ச் 20, வியாழக்கிழமை

பிமல்-ஹர்ஷவுக்கு இடையில் வாய்த்தர்க்கம்

Simrith   / 2025 மார்ச் 20 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இன்று பாராளுமன்றத்தில் பொது நிதிக் குழுவின் விவகாரங்கள் தொடர்பாக வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

பொது நிதிக் குழுவின் தலைவரான கலாநிதி டி சில்வா, குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் ஆய்வு செய்ய போதுமான நேரம் வழங்கப்படாவிட்டால் நிராகரிக்க முடியும் என்றார். 

"நான் பொது நிதிக் குழுவின் தலைவர், எனவே நான் அதை நிராகரிக்க முடியும்," என்று டி சில்வா கூறினார்.

பதிலளித்த சபைத் தலைவர், கலாநிதி டி சில்வா அச்சுறுத்தல்களை விடுத்ததாகக் குற்றம் சாட்டினார். 

"அரசாங்க உறுப்பினரோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினரோ அச்சுறுத்தும் தொனியில் பேச முடியாது," என்று அவர் கூறினார்.

பொது நிதிக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிப்பதைத் தடுக்க, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தால் நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்டதை டி சில்வா அப்போது நினைவு கூர்ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X