2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை

S.Renuka   / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன்,  புதிய, விரிவான பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பாதுகாப்புத் திட்டத்தில், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரச புலனாய்வு அமைப்புகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, நடமாடும் ரோந்துகள் மற்றும் பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் பிரிவும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கொலன்னாவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலையைத் தொடர்ந்து, சில நபர்களின் தொடர்புகளின் அடிப்படையில், பாதாள உலகக் குற்றங்கள் நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பாதாள உலகம் மிகவும் நுட்பமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X