2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு

Editorial   / 2024 செப்டெம்பர் 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

  நிதர்ஷன் வினோத்  

 தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய குறித்த பெண்ணின் வீடு தீக்கிரியாக்கியுள்ளது. இதனால் வீட்டிலிருந்த குறித்த பெண்ணும் எரிந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ள தீயில் எரிந்துள்ளது. அத்துடன் வீட்டின் வாசலிலே சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் தூள் வீசப்பட்டுள்ளது.

குறித்த சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புபடையினர், தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என்றும் அல்லது காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடு எரிந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .