Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 12, புதன்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 12 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவர் கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (10) இரவு பயிற்சி பெற்று வந்த 32 வயது மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபரை கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மருத்துவரிடமிருந்து திருடிய அலைபேசியைபயன்படுத்தி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்திற்கு முந்தைய நாள் போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago