2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

பெண் சட்டத்தரணி வெட்டிக் கொலை

Simrith   / 2024 செப்டெம்பர் 21 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

35 வயதுடைய முன்னணி பெண் சட்டத்தரணி ஒருவர் பெங்கிரிவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வீட்டின் சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை  அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்தவர் ஜெயனி செவ்மினி டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பெந்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபரை பெந்தர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

45 வயதான சந்தேக நபர் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .